ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட தவறியது. குறிப்பாக விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோ நடிக்கும் கதையை ஒரே மாலில் நடக்கும் சம்பவங்களாக கோர்த்து உருவாக்கி இருந்ததே இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக பலரும் கூறிவந்தனர்.
இந்த படத்தில் பயங்கரவாதிகளில் ஒருவராகவும் பின்னர் அவர்களிடமிருந்து விலகி அப்ரூவராக மாறி விஜய்க்கு உதவுபவராகவும் நடித்திருந்தவர் மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் இந்த படத்தின் மூலம் அடி எடுத்து வைத்த சாக்கோ, தனக்கு இங்கே நல்ல அறிமுகமும் வரவேற்பும் கிடைக்கும் என பெரிதும் நம்பியிருந்தார்.
ஆனால் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பீஸ்ட் படம் குறித்து கூறியுள்ள கருத்துக்கள் அவர் எவ்வளவு ஏமாற்றத்துக்கு ஆளாகி இருந்தார் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளன. குறிப்பாக பீஸ்ட் படத்தையும் அதன் காட்சி அமைப்புகளையும் கிண்டல் அடிக்கும் விதமாக அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படம் பற்றி ஒரு பேட்டியில், பீஸ்ட் படம் உங்களுக்கு தமிழில் நல்லதொரு என்ட்ரியாக அமைந்ததா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பீஸ்ட் படம் தமிழ் சினிமாவுக்கே ஒரு நல்ல என்ட்ரி ஆக அமையவில்லை என்று பதிலளித்துள்ளார் ஷைன் டாம் சாக்கோ. மேலும் இந்த படத்தை இப்போது வரை தான் பார்க்கவில்லை என்றும் இந்த படம் குறித்து வெளியான மீம்களை மட்டும்தான் பார்த்ததாகவும் கூறியுள்ள சாக்கோ இந்த படத்தை பார்ப்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், விஜய் அவரை அடித்து துவைத்து கயிற்றில் சூட்கேஸ் போல கட்டி தூக்கிக்கொண்டு வரும் காட்சியில் நடித்தது பற்றி சாக்கோ கூறும்போது, ஒரு ஆளை அப்படி கட்டி தூக்கி வரும்போது குறைந்தபட்சம் அவரின் எடை எவ்வளவு இருக்கும் அதை தூக்கும்போது முகத்தில் எவ்வளவு சிரமப்படுவது போன்று காட்ட வேண்டி இருக்கும் என்பது பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஏதோ ஒரு பேப்பர் கட்டை தூக்கி வருவது போல அந்த காட்சியை எடுத்து இருந்தார்கள். அதுதான் அந்த படம் ரொம்பவே போர் அடித்து விட்டதற்கு காரணம்” என்றும் கூறியுள்ளார் ஷைன் தாம் சாக்கோ.
தான் தமிழில் நடித்த முதல் படத்தையே இன்னும் அவர் பார்க்கவில்லை என கூறியுள்ளதும் படம் பற்றியும் அதில் நடித்த விஜய்யின் நடிப்பு பற்றியும் அவர் விமர்சித்துள்ளதும் விஜய் ரசிகர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.