எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
எம்ஜிஆர், கமல் முயற்சித்து செய்ய முடியாதை மணிரத்னம் முடித்து காட்டி உள்ளார். ஆம் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க இவர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அது கை கூடி வரவில்லை. ஆனால் இப்போது பொன்னியின் செல்வன் நாவலை படமாகவே எடுத்து முடித்துவிட்டார் இயக்குனர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்தின் முதல்பாகம் செப்.,30ல் வெளியாக உள்ளது. இந்நிலையில் முதல்பாகத்தின் டீசரை வருகிற ஜூலை 7ம் தேதி, சோழ மன்னான தஞ்சாவூரில் பிரம்மாண்ட விழாவாக நடத்தி வெளியிட எண்ணி உள்ளார் மணிரத்னம்.