ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எம்ஜிஆர், கமல் முயற்சித்து செய்ய முடியாதை மணிரத்னம் முடித்து காட்டி உள்ளார். ஆம் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க இவர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அது கை கூடி வரவில்லை. ஆனால் இப்போது பொன்னியின் செல்வன் நாவலை படமாகவே எடுத்து முடித்துவிட்டார் இயக்குனர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்தின் முதல்பாகம் செப்.,30ல் வெளியாக உள்ளது. இந்நிலையில் முதல்பாகத்தின் டீசரை வருகிற ஜூலை 7ம் தேதி, சோழ மன்னான தஞ்சாவூரில் பிரம்மாண்ட விழாவாக நடத்தி வெளியிட எண்ணி உள்ளார் மணிரத்னம்.