சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு | ஷேன் நிகாமிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: சாந்தனு | பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! |
மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானாலும் கூட நடிகை சாய்பல்லவிக்கு தெலுங்கு தேசத்தில் தான் ரசிகர்கள் அதிகம். அதற்கேற்ற மாதிரி அவரும் தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சாய்பல்லவி நடிப்பில் வேணு உடுகுலா இயக்கத்தில் உருவாகியுள்ள விராட பருவம் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. ஒருபக்கம் மதம் சம்பந்தமாக சாய்பல்லவி கூறிய கருத்துக்கள் மத உணர்வாளர்களிடம் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி அதனால் சாய்பல்லவிக்கு எதிராக அவர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
ஆனால் இன்னொரு பக்கம் சாய்பல்லவி அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். நேற்று விராட பருவம் வெளியாகியுள்ள ஒருசில தியேட்டர்களுக்கு படம் பார்க்க சென்ற சாய்பல்லவி அங்கு தன்னைச் சூழ்ந்து கொண்ட ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது சாய்பல்லவியின் தீவிர ரசிகர் ஒருவர் அவரது உருவத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டுப் போன சாய்பல்லவி அந்த ரசிகரை அழைத்து அவருடன் அருகில் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ரசிகரின் மகிழ்ச்சியும் சாய்பல்லவியின் நெகிழ்ச்சியுமாக அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.