அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் |
மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானாலும் கூட நடிகை சாய்பல்லவிக்கு தெலுங்கு தேசத்தில் தான் ரசிகர்கள் அதிகம். அதற்கேற்ற மாதிரி அவரும் தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சாய்பல்லவி நடிப்பில் வேணு உடுகுலா இயக்கத்தில் உருவாகியுள்ள விராட பருவம் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. ஒருபக்கம் மதம் சம்பந்தமாக சாய்பல்லவி கூறிய கருத்துக்கள் மத உணர்வாளர்களிடம் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி அதனால் சாய்பல்லவிக்கு எதிராக அவர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
ஆனால் இன்னொரு பக்கம் சாய்பல்லவி அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். நேற்று விராட பருவம் வெளியாகியுள்ள ஒருசில தியேட்டர்களுக்கு படம் பார்க்க சென்ற சாய்பல்லவி அங்கு தன்னைச் சூழ்ந்து கொண்ட ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது சாய்பல்லவியின் தீவிர ரசிகர் ஒருவர் அவரது உருவத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டுப் போன சாய்பல்லவி அந்த ரசிகரை அழைத்து அவருடன் அருகில் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ரசிகரின் மகிழ்ச்சியும் சாய்பல்லவியின் நெகிழ்ச்சியுமாக அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.