தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானாலும் கூட நடிகை சாய்பல்லவிக்கு தெலுங்கு தேசத்தில் தான் ரசிகர்கள் அதிகம். அதற்கேற்ற மாதிரி அவரும் தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சாய்பல்லவி நடிப்பில் வேணு உடுகுலா இயக்கத்தில் உருவாகியுள்ள விராட பருவம் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. ஒருபக்கம் மதம் சம்பந்தமாக சாய்பல்லவி கூறிய கருத்துக்கள் மத உணர்வாளர்களிடம் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி அதனால் சாய்பல்லவிக்கு எதிராக அவர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
ஆனால் இன்னொரு பக்கம் சாய்பல்லவி அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். நேற்று விராட பருவம் வெளியாகியுள்ள ஒருசில தியேட்டர்களுக்கு படம் பார்க்க சென்ற சாய்பல்லவி அங்கு தன்னைச் சூழ்ந்து கொண்ட ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது சாய்பல்லவியின் தீவிர ரசிகர் ஒருவர் அவரது உருவத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டுப் போன சாய்பல்லவி அந்த ரசிகரை அழைத்து அவருடன் அருகில் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ரசிகரின் மகிழ்ச்சியும் சாய்பல்லவியின் நெகிழ்ச்சியுமாக அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.