பிளாஷ்பேக்: மேடை நாடகம், வெள்ளித்திரை இரண்டிலும் முத்திரை பதித்த “வியட்நாம் வீடு” | இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் |
நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த 9ம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மறுநாளே திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். அதற்கு மறுநாள் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று விமானம் மூலம் கொச்சிக்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து நயன்தாரா பிறந்த ஊரான திருவல்லாவுக்கு சென்றனர். அங்கு பெற்றோர்களிடம் அவர்கள் ஆசி பெற்றனர். இரண்டு வாரங்கள் வரை அவர்கள் நயன்தாராவின் பெற்றோருடன் தங்கி இருக்கிறார்கள். இதற்கு இடையில் கொச்சியில் மலையாள பத்திரிகையாளர்களுக்கு நன்றி சொல்ல இருக்கிறார்கள். பின்னர் சென்னை திரும்பும் அவர்கள் அவரவர் பணியாற்றும் படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார்கள்.