நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த 9ம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மறுநாளே திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். அதற்கு மறுநாள் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று விமானம் மூலம் கொச்சிக்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து நயன்தாரா பிறந்த ஊரான திருவல்லாவுக்கு சென்றனர். அங்கு பெற்றோர்களிடம் அவர்கள் ஆசி பெற்றனர். இரண்டு வாரங்கள் வரை அவர்கள் நயன்தாராவின் பெற்றோருடன் தங்கி இருக்கிறார்கள். இதற்கு இடையில் கொச்சியில் மலையாள பத்திரிகையாளர்களுக்கு நன்றி சொல்ல இருக்கிறார்கள். பின்னர் சென்னை திரும்பும் அவர்கள் அவரவர் பணியாற்றும் படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார்கள்.