அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தெலுங்குத் திரையுலகின் 'அழகான ராட்சசி' என ராஷ்மிகா மந்தானாவைச் சொல்லலாம். அவருக்கு அப்படி ஒரு ரசிகர் கூட்டம் தெலுங்கில் இருக்கிறது. தமிழில் 'சுல்தான்' மூலம் அறிமுகமானாலும் அடுத்து விஜய்யுடன் நடிக்கும் படம்தான் அவருடைய அட்டகாசம் ஆரம்பமாக உள்ளது. படத்தின் பூஜையிலேயே தன்னுடைய சிரிப்பால் வசீகரித்தவர்.
அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்காக விதவிதமான புகைப்படங்களைப் பதிவிடுவழதை வழக்கமாக வைத்திருப்பவர் ராஷ்மிகா. இன்ஸ்டாவில் கடைசியாக அவர் வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படத்திற்கு இருபத்தி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளனர் ரசிகர்கள்.
சாம்பல் நிற லெஹங்கா ஆடையில், மந்தகாசச் சிரிப்பில் மந்தானா இருக்கும் புகைப்படத்துடன், “என்னுடைய சிரிப்பை உங்களுக்கு அனுப்புகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளதால்தான் இவ்வளவு லைக்ஸ் போலிருக்கிறது.