'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் தனது 169வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அதேப்போல் எச்.வினோத் இயக்கிய வலிமை படத்தை அடுத்து தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் தனது 61ஆவது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். அவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினியை அவரது வீட்டிற்கு சென்று அஜித் குமார் சந்தித்ததாக ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்தப் புகைப்படத்தை பார்க்கையில் ரஜினியும் அஜித்தும் நேரில் சந்தித்துக்கொண்ட புகைப்படமாக தெரியவில்லை. தனித்தனியே அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மார்பிங் முறையில் இணைத்து வெளியிட்டது போல் தெரிகிறது. இதனால் நெட்டிசன்கள் மிகுந்த குழப்பத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.