தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'வீரமே வாகை சூடும்' படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் 'லத்தி'. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இப்படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கியுள்ளார். ஆனால், இயக்குனருக்குத் தெரியாமல் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். ஏற்கெனவே, நடிகர் சங்க விவகாரங்களில் ரமணா, நந்தா ஆகியோரது பேச்சைத்தான் விஷால் கேட்பதாக முன்னர் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அதனால், விஷால் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் 'லத்தி' பட அறிவிப்பு விவகாரத்தில் படத்தின் இயக்குனருக்கே அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள் விஷால், நந்தா, ரமணா. படம் பற்றிய வெளியீட்டு அறிவிப்பை படத்தின் இயக்குனரான வினோத்குமார் அவரது டுவிட்டர் பதிவில் கூட பகிரவில்லை. படத்தின் வேலைகளை வினோத்குமார் தொடர்ந்து பார்ப்பாரா அல்லது விஷாலும், அவரது நண்பர்களுமே பார்ப்பார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.