ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் | ராஜ்யசபா எம்.பி.யாக இளையராஜா நியமனம் : பிரதமர், ரஜினி, கமல் வாழ்த்து | காமெடி கதையில் நடிக்கும் அனுஷ்கா | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு | கடுவாவுக்கு யு/ஏ சான்றிதழ் ; சிக்கலின்றி வெளியாகிறது | மாமன்னன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு | அடேங்கப்பா... 800 தியேட்டர்களில் வெளியாகும் 'தி லெஜண்ட்' | மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்கும் தனுஷ் | உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” | சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த 'காட்பாதர்' குழு |
மலையாள திரையுலகில் குணசித்திர நடிகரும் பிரபல தயாரிப்பாளருமான விஜய்பாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகை ஒருவரால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானார். தனது படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக விஜய்பாபு பலாத்காரம் செய்து விட்டார் என்று நடிகை புகார் அளித்ததன் பேரில் விஜய்பாபு மீது வழக்கு தொடரப்பட்டது. இதனைத்தொடர்ந்து விஜய்பாபு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளார். அதேசமயம் அவர் அங்கிருந்தபடியே இங்கே முன்ஜாமீன் பெறுவதற்கு முயற்சித்து வருகிறார்.
விஜய்பாபுவின் வழக்கறிஞர் நீதிபதியிடம் விஜய்பாபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் வியாழன், வெள்ளியில் இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அதை கேட்ட நீதிபதி முதலில் விஜய்பாபு இந்தியாவுக்கு எப்போது திரும்புகிறார் என்பதற்கான ரிட்டர்ன் டிக்கெட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யட்டும். அதன்பிறகு அவருக்கு முன்ஜாமீன் கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் நிபந்தனை விதித்தார். அதேசமயம் இந்த வழக்கில் விஜய்பாபுவுக்கு எப்படியும் முன்ஜாமீன் கிடைத்துவிடும் என்பதால் அதற்கு முன்பாகவே அவரை கைது செய்வதற்கு போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனராம்.