நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகராகிவிட்டார் கன்னட நடிகரான யஷ். நாடக நடிகர், டிவி நடிகர், சினிமா நடிகர் என அவரது பயணம் ஆச்சரியப்படும் அளவிற்கு வளர்ந்து உயர்ந்து இப்போது பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார்.
'கேஜிஎப்' படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இரண்டாம் பாகம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை ஆரம்பித்துவிட்டார். அதற்கடுத்து ஜுனியர் என்டிஆரின் 31வது படத்திற்கும் ஒப்பந்தமாகிவிட்டார். ஆனால், 'கேஜிஎப்' படத்திற்காக எட்டு ஆண்டுகள் வரை உழைத்த யஷ் தனது அடுத்த படம் பற்றிய எந்த அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை.
'கேஜிஎப் 2' படத்தின் 50வது நாளில் அவருடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. கன்னடத்தில் 'முப்டி' என்ற படத்தை இயக்கிய நார்தன் இயக்கத்தில் யஷ் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த 'முப்டி' படம்தான் தற்போது சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்க தமிழில் 'பத்து தல' என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. முதலில் இப்படத்தை இயக்க ஆரம்பித்த நார்தன் பின்னர் விலகிவிட்டார்.
'கேஜிஎப் 3' படம் உருவாக இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகலாம். பிரசாந்த் நீல் 'சலார், ஜுனியர் என்டிஆர் 31' படங்களை முடித்த பிறகே 'கேஜிஎப் 3' படத்திற்கு வர முடியும். எனவே, யஷ் அடுத்து ஒரு பான்--இந்தியா படத்தில் நடிக்காமல், ஒரு கன்னடப் படத்தில்தான் நடிப்பார் என உறுதியாகக் கூறுகிறார்கள்.