ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தமிழ் சினிமா வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் கன்னட சினிமா மெதுவாகவே வளர்ந்தது. கர்நாடகாவை சேர்ந்த ஹொன்னப்ப பாகவதர், ராஜம்மா, பி.ஆர்.பந்துலு உள்ளிட்ட பலர் தமிழில் நடித்துக் கொண்டிருந்தனர்.
1936ம் ஆண்டு வெளியான கன்னடப் படம் 'சம்சார நொகே'. இந்த படத்தின் கதை சினிமா ஆவதற்கு முன்பே நாடகமாக நடத்தப்பட்டது. குறிப்பாக சென்னையில் கன்னடர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் இந்த நாடகம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தது. சுமார் 4 ஆயிரம் முறை நடத்தப்பட்ட நாடகம் என்று இதனை குறிப்பிடுவார்கள்.
கன்னடத்தில் இந்த நாடகம், சினிமாவாகி பெரிய வெற்றி பெற்றது. பி.ஆர்.பந்துலு, எம்வி.ராஜம்மா, கிருஷ்ணமூர்த்தி, பத்மாவதி, எம்.எஸ்.மகாதேவ ராவ் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஹெச்.எல்.என்.சிம்ஹா இயக்கி இருந்தார்.
இந்த நாடகம் சென்னையில் புகழ் பெற்றிருந்ததால் 1948ம் ஆண்டு இந்த படத்தை 33 ஆயிரம் ரூபாய் செலவில் தமிழ் படமாக்கி வெளியிட்டனர். படம் சென்னை அதன் சுற்றுப்புற பகுதியில் மட்டும் வெற்றிகரமாக ஓடி 2லட்சத்து 50 ஆயிரம் வசூலித்தது. இது அப்போது பெரிய வசூல்.