ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் |
தமிழ் சினிமா வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் கன்னட சினிமா மெதுவாகவே வளர்ந்தது. கர்நாடகாவை சேர்ந்த ஹொன்னப்ப பாகவதர், ராஜம்மா, பி.ஆர்.பந்துலு உள்ளிட்ட பலர் தமிழில் நடித்துக் கொண்டிருந்தனர்.
1936ம் ஆண்டு வெளியான கன்னடப் படம் 'சம்சார நொகே'. இந்த படத்தின் கதை சினிமா ஆவதற்கு முன்பே நாடகமாக நடத்தப்பட்டது. குறிப்பாக சென்னையில் கன்னடர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் இந்த நாடகம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தது. சுமார் 4 ஆயிரம் முறை நடத்தப்பட்ட நாடகம் என்று இதனை குறிப்பிடுவார்கள்.
கன்னடத்தில் இந்த நாடகம், சினிமாவாகி பெரிய வெற்றி பெற்றது. பி.ஆர்.பந்துலு, எம்வி.ராஜம்மா, கிருஷ்ணமூர்த்தி, பத்மாவதி, எம்.எஸ்.மகாதேவ ராவ் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஹெச்.எல்.என்.சிம்ஹா இயக்கி இருந்தார்.
இந்த நாடகம் சென்னையில் புகழ் பெற்றிருந்ததால் 1948ம் ஆண்டு இந்த படத்தை 33 ஆயிரம் ரூபாய் செலவில் தமிழ் படமாக்கி வெளியிட்டனர். படம் சென்னை அதன் சுற்றுப்புற பகுதியில் மட்டும் வெற்றிகரமாக ஓடி 2லட்சத்து 50 ஆயிரம் வசூலித்தது. இது அப்போது பெரிய வசூல்.