நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

தமிழ் சினிமா வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் கன்னட சினிமா மெதுவாகவே வளர்ந்தது. கர்நாடகாவை சேர்ந்த ஹொன்னப்ப பாகவதர், ராஜம்மா, பி.ஆர்.பந்துலு உள்ளிட்ட பலர் தமிழில் நடித்துக் கொண்டிருந்தனர்.
1936ம் ஆண்டு வெளியான கன்னடப் படம் 'சம்சார நொகே'. இந்த படத்தின் கதை சினிமா ஆவதற்கு முன்பே நாடகமாக நடத்தப்பட்டது. குறிப்பாக சென்னையில் கன்னடர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் இந்த நாடகம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தது. சுமார் 4 ஆயிரம் முறை நடத்தப்பட்ட நாடகம் என்று இதனை குறிப்பிடுவார்கள்.
கன்னடத்தில் இந்த நாடகம், சினிமாவாகி பெரிய வெற்றி பெற்றது. பி.ஆர்.பந்துலு, எம்வி.ராஜம்மா, கிருஷ்ணமூர்த்தி, பத்மாவதி, எம்.எஸ்.மகாதேவ ராவ் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஹெச்.எல்.என்.சிம்ஹா இயக்கி இருந்தார்.
இந்த நாடகம் சென்னையில் புகழ் பெற்றிருந்ததால் 1948ம் ஆண்டு இந்த படத்தை 33 ஆயிரம் ரூபாய் செலவில் தமிழ் படமாக்கி வெளியிட்டனர். படம் சென்னை அதன் சுற்றுப்புற பகுதியில் மட்டும் வெற்றிகரமாக ஓடி 2லட்சத்து 50 ஆயிரம் வசூலித்தது. இது அப்போது பெரிய வசூல்.