இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து தற்போது பாலா இயக்கும் தனது 41 வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மீனவர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா மாற்றுத்திறனாளியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை அடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கான பிரீ புரொடக்சன்ஸ் பணிகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. என்றாலும் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் தொடங்குவதற்கு கால தாமதம் ஆகும் என்பதால் பாலா படத்தில் நடித்து முடித்ததும் ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே .ஞானவேல் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறாராம் சூர்யா. ஜெய் பீம் படம் வெளியானபோது சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தது. அதனால் சூர்யா- ஞானவேல் மீண்டும் இணையும் புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.