என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

மலையாள சினிமாவில் வளரும் நடிகரும், தயாரிப்பாளருமாக இருப்பவர் விஜய்பாபு. படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களை நாசம் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மலையாள இளம் நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்தததை தொடர்ந்து அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் விஜய் பாபு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
துபாயில் அவருக்கு பல்வேறு தொழில்கள் இருப்பதால் அங்கு தப்பிச் சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில் உடனடியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி கொச்சி போலீசார் விஜய் பாபுவுக்கு இமெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பினர்.
இதற்கிடையே முன்ஜாமீன் கோரி அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் விஜய்பாபு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்னும் ஒருசில தினங்களில் விசாரணைக்கு வருகிறது. அவருக்கு முன்ஜாமீன் கிடைக்க வாய்ப்பிருப்பதால் அதற்குள் அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதனால் விஜய் பாபு துபாயில் இருந்து வேறு நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் சக்தி மிக்க நபராக உள்ள விஜய்பாபு 10 நாட்களுக்கு ஒரு முறை நாடு விட்டு நாடு செல்வதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மத்திய அரசின் வெளியுறவுத்துறை கொச்சி போலீசாரின் வேண்டுகோளை ஏற்று விஜய்பாபுவின் பாஸ்போர்ட்டை முடக்கி உள்ளது.