'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் கடந்த வாரம் மம்முட்டி நடித்த புழு என்கிற படம் வெளியானது. நேற்று மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள டுவல்த் மேன் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனாலும் இந்த இரண்டு படங்களுமே தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியானது இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் சற்று வருத்தம் தான்.. என்றாலும் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் சிலருக்கு இது சந்தோசமான விஷயமாக அமைந்து விட்டது.
மோகன்லாலின் படம் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் கிட்டத்தட்ட 300 திரையரங்குகள் அவரது படத்திற்கு சென்றுவிடும். ஆனால் அவரது படம் நேரடியாக ஓடிடியிலேயே வெளியாகி விட்டதால், 5 சிறிய படங்கள் நேற்று தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளன.. அதேசமயம் இப்படி சிறிய படங்கள் தைரியமாக தியேட்டர்களில் வெளியாகும்போது எதற்காக மோகன்லால் ஜீத்து ஜோசப் என்கிற வெற்றிக்கூட்டணியில் உருவான டுவல்த் மேன் படத்தை ஓடிடியில் வெளியிட்டார்கள் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.