'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நிகழ்வு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் மலையாள நடிகர் திலீப் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு பின் ஜாமினில் விடுதலையானார்.
இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திலீப்பின் நண்பராக இருந்து பின்னர் அவருக்கு எதிராக திரும்பிய இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் திலீப் மீது விசாரணை அதிகாரிகளை கொல்ல முயற்சித்தார் என்று கூறி குற்றம் சாட்டி புகார் அளித்தார். அதனடிப்படையில் மீண்டும் திலீப் மீது இன்னொரு வழக்கும் பதியப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றார் திலீப்.
இயக்குனர் பாலச்சந்தர் குமார் போலீஸாரிடம் அளித்த புகாரில் திலீப் முதல் வழக்கில் ஜாமின் பெறுவதற்கும் அதன்பிறகு விசாரணை அதிகாரிகள் அவரை நெருங்காமல் இருப்பதற்கும் பின்னணியில் நெய்யாற்றின்கரையை சேர்ந்த வின்சென்ட் சாமுவேல் என்கிற பிஷப் ஆதரவாக செயல்பட்டார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக தற்போது போலீசாரிடம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த பிஷப் வின்சென்ட் சாமுவேல், பாலச்சந்திர குமார் கூறியவற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் இது உள்நோக்கத்துடன் கூறப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.




