2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரும் தற்போதைய ஆந்திர அரசின் துணை முதல்வருமான பவன் கல்யாண் தற்போதும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்களில் ரசிகர்கள் பிரதானமாக எதிர்பார்ப்பது சண்டைக்காட்சிகளை தான். அவரும் தனது படங்களில் அதை குறைவில்லாமல் ரசிகர்களுக்கு அளித்து வருகிறார். அந்த வகையில் சினிமாவில் நுழைவதற்கு முன்பாகவே அதாவது அவர் சென்னையில் இருந்த காலகட்டத்திலேயே கராத்தே, குங்பூ உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டுதான் சினிமாவில் நுழைந்தார். அந்த சமயத்தில் தான் அவர் பிரசித்தி பெற்ற ஜப்பானிய வாள் சண்டை பயிற்சியையும் கற்றுக் கொண்டார்.
இந்த கலையில் அவரது நீண்ட கால அர்ப்பணிப்பும் அதில் அவர் காட்டி வரும் ஒழுங்கும் காரணமாக சோகோ பூ கன்ட்ரி கை என்கிற ஜப்பானிய அமைப்பு அவருக்கு இந்த கலையின் ஐந்தாவது டான் என்கிற அங்கீகாரத்தை அளித்துள்ளது. தெலுங்கு திரை உலகில் இருந்து முதன்முதலாக இப்படி ஒரு கவுரவத்தை பெறுவது பவன் கல்யாண் மட்டுமே. அது மட்டுமல்ல, கோல்டன் டிராகன் ஆர்கனைசேஷன் பவன் கல்யாணுக்கு டைகர் ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் என்கிற பட்டத்தையும் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.




