இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண்,சத்யராஜ், கிர்த்தி ஷெட்டி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வா வாத்தியார்'. நாளை(ஜன., 15) வெளியாக உள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கார்த்திக் பேசியது...
பல தடங்கலுக்கு பிறகே வா வாத்தியார் வெளியாகிறது. என் முதல் படமே(பருத்திவீரன்) பட தடங்கலை கடந்தே வெளியானது. இரண்டாவது படமும் (ஆயிரத்தில் ஒருவன்)அப்படியே. தடங்கல்கள் எனக்கு புதிதல்ல. ஒரு நல்ல கதை தனக்கு தேவையானவற்றை தானே அமைத்துக்கொள்ளும் என்பார்கள். அதை நம்பிவிட்டால் நிம்மதியாக இருப்போம். நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை குறித்து கவலைப்படக் கூடாது.
எம்.ஜி.ஆர் மறைந்து பல வருடங்கள் ஆனாலும், அவரைப் பற்றிய நினைவுகள் இன்னும் அழுத்தமாக உள்ளது. இன்று எம்ஜிஆர் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினோம் . இன்னும் அவரைப்பற்றி பேசுகிறோம். ஜனநாயகன் தாமதம் ஆனாலும், அது சரியான நேரத்தில் வெளியாகும் என நம்புகிறேன். இந்த பட இயக்குனர் படம் பிரச்னை இல்லாமல் ரிலீஸ் ஆக வேண்டும் என வேண்டி திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று இருக்கிறார்.
எம்ஜிஆர் ஒரு சூப்பர் ஹீரோதான். அவரை இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் உதவியுடன் கொண்டு வந்து இருக்கிறோம். இந்த படத்துக்கு பிரச்னைகள் வந்தபோது எல்லாம் சரியாகும். மன அழுத்ததை தலைக்கு ஏற்ற வேண்டாம். உடல் நிலை பாதிக்கப்பட கூடாது என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன். இந்த படம் வெளியாக அண்ணன் சூர்யா உட்பட பலர் உதவி செய்தார்கள். அழகான ஹீரோயின் கிர்த்தி ஷெட்டியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்''.
இவ்வாறு அவர் கூறினார்.




