அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா | பிளாஷ்பேக்: அருணாச்சலம் முன்னோடி 'பணம் படுத்தும் பாடு' | என்னது, பாகுபலி பிரபாஸ் வயது 46 ஆ? | 2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல் | எதிர்த்துப் போட்டியிட்ட வில்லன் நடிகரையும் உதவிக்கு இணைத்துக் கொண்ட ஸ்வேதா மேனன் | ஹாட்ரிக் வெற்றியால் படு பிஸியான பிரதீப் ரங்கநாதன் |
கடந்த சில வருடங்களாகவே தங்களது அபிமான நடிகர்கள் நடித்து வரும் படங்களுக்கு அவர்களது ரசிகர்கள் அப்டேட் கேட்டு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், இயக்குனர்களை தொந்தரவு செய்து வருவது ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது. குறிப்பாக தமிழில் அஜித் நடிக்கும் படங்களின் தகவல்கள் பெரிய அளவில் வெளியாகாமல் ரகசியமாகவே பாதுகாக்கப்படும் என்பதால், அவரது ரசிகர்கள் பிரதமர் மோடி வரை அப்டேட் கேட்டு அதை வைரல் ஆக்கினார்கள்.
இந்த நிலையில் தெலுங்கில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்திற்கு சமீபகாலமாக அப்டேட் எதுவும் வெளியாகாததால் விரைவில் அப்டேட் வெளியிடுமாறும் இல்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் ரசிகர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் படங்கள் நீண்ட தாமதத்திற்கு பிறகு வெளியானதால் தோல்வியை தழுவின என்றும், சலார் படத்தை உரிய நேரத்தில் சீக்கிரமாக முடித்து வெளியிட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அந்த ரசிகர் கடைசி வரிகளை ரத்தத்தில் எழுதியதுபோன்று சிவப்பு நிற எழுத்துக்களால் எழுதியுள்ளார்.
இப்படிப்பட்ட ரசிர்களை என்னவென்று சொல்வது. மாய உலகமான சினிமா மோகம் இவரை எந்தளவுக்கு தள்ளி உள்ளது என பலரும் அதிர்ச்சி உடன் வேதனைப்படுகின்றனர்.