ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! | முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! | விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்? | தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்! | அஜய் தேவ்கனை சந்தித்த குஷ்பூ | ஜானி மாஸ்டருக்கு நன்றி சொன்ன ஜாக்குலின் பெர்னாண்டஸ் | போர்க்கப்பலை பார்வையிட்ட மோகன்லால் ; அதிகாரிகள் உற்சாக வரவேற்பு | அது என்னுடைய கார் அல்ல ; ஷாஜி கைலாஷ் விளக்கம் | 6 வருடமாக டார்ச்சர் கொடுத்த விமர்சகர் ; நித்யா மேனன் அதிர்ச்சி தகவல் |
இந்தியத் திரையுலகில் 1000 கோடி வசூலைக் கடந்து வெளியாகி ஒரு மாதம் ஆனாலும் இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் படம் 'கேஜிஎப் 2'. இப்படத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள்.
இப்படத்திற்கு மட்டும் தனியாக பணம் செலுத்திதான் பார்க்க வேண்டும் என்றாலும் திடீரென படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டது தியேட்டர்காரர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல தியேட்டர்களில் படத்தை இன்றுடன் தூக்கிவிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தியேட்டர்களில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை இப்படியா வெளியிடுவது என தயாரிப்பாளர்கள் மீது தியேட்டர்காரர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்களாம். ஒரு மாநிலத்தில் மட்டும் வெளியாகியிருந்தால் பரவாயில்லை. பான்--இந்தியா படமாக வெளியாகி அனைத்து இடங்களிலும் நன்றாக ஓடும் படத்திற்கு ஒரு மாதத்திற்குள்ளாக ஓடிடி வெளியீடு ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்களாம்.
1200 கோடிக்கும் மேலும் வசூல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'கேஜிஎப் 2' படம் விரைவில் முழுவதுமாக தியேட்டர்களை விட்டு தூக்கப்படும் எனத் தெரிகிறது.