டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியத் திரையுலகில் 1000 கோடி வசூலைக் கடந்து வெளியாகி ஒரு மாதம் ஆனாலும் இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் படம் 'கேஜிஎப் 2'. இப்படத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள்.
இப்படத்திற்கு மட்டும் தனியாக பணம் செலுத்திதான் பார்க்க வேண்டும் என்றாலும் திடீரென படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டது தியேட்டர்காரர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல தியேட்டர்களில் படத்தை இன்றுடன் தூக்கிவிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தியேட்டர்களில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை இப்படியா வெளியிடுவது என தயாரிப்பாளர்கள் மீது தியேட்டர்காரர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்களாம். ஒரு மாநிலத்தில் மட்டும் வெளியாகியிருந்தால் பரவாயில்லை. பான்--இந்தியா படமாக வெளியாகி அனைத்து இடங்களிலும் நன்றாக ஓடும் படத்திற்கு ஒரு மாதத்திற்குள்ளாக ஓடிடி வெளியீடு ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்களாம்.
1200 கோடிக்கும் மேலும் வசூல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'கேஜிஎப் 2' படம் விரைவில் முழுவதுமாக தியேட்டர்களை விட்டு தூக்கப்படும் எனத் தெரிகிறது.