சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
கொரடலா சிவா இயக்கத்தில், மணி சர்மா இசையமைப்பில், சிரஞ்சீவி, ராம்சரண், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான தெலுங்குப் படம் 'ஆச்சார்யா'. படம் எதிர்பார்த்தபடி இல்லாத காரணத்தால், நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வெளிவந்துள்ளது. சிரஞ்சீவி படம் என்றாலே தெலுங்கு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், இப்படத்திற்கான முதல் நாள் வசூலே ஏமாற்றத்தைத் தந்துள்ளது. சுமார் 140 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் அதே அளவிற்கு வியாபாரம் ஆகியுள்ளது.
தெலுங்கு மாநிலங்களில் முதல் நாள் வசூலாக 18 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. விமர்சனங்கள் நெகட்டிவ்வாக வந்துள்ளதால் எதிர்பார்த்தபடி ரசிகர்கள் வர மாட்டார்கள் என்ற அதிர்ச்சியில் தியேட்டர்காரர்கள் இருக்கிறார்களாம். இன்றும் நாளையும் விடுமுறை, அடுத்து ரம்ஜான் விடுமுறை என இருப்பதால் ஓரளவிற்கு வசூலித்துவிடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. இருப்பினும் நஷ்டத்திலிருந்து தப்புவார்களா என்பது சந்தேகம்தான் என டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.