ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் பிரபாஸிற்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதன்பிறகு அவர் நடித்த சாஹோ, ராதேஷ்யாம் படங்கள் அதிர்ச்சி தோல்வியை கொடுத்தன. இந்த நிலையில் தற்போது ஆதிபுருஷ் படத்தில் நடித்து முடித்து விட்டவர், சலார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நடித்துக் கொண்டே தெலுங்கில் பிராஜக்ட் கே மற்றும் மாருதி இயக்கும் படங்களிலும் நடிக்க கமிட்டாகி இருந்தார் பிரபாஸ். ஆனால் தான் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து விட்டதால், சலார் படத்தை மெகா ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் தனது கவனத்தை முழுமையாக திருப்பி இருக்கிறார் பிரபாஸ்.
தற்போது கேஜிஎப்- 2 படம் சூப்பர் ஹிட் அடித்திருப்பதால் சலார் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனால் சலார் படத்தில் நடித்து முடிக்கும்வரை வேறு படங்களில் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ள பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கும் பிராஜெக்ட் கே மற்றும் மாருதி இயக்கும் படத்தை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறார் என்ற தகவல் டோலிவுட்டில் வெளியாகியிருக்கிறது.