முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் பிரபாஸிற்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதன்பிறகு அவர் நடித்த சாஹோ, ராதேஷ்யாம் படங்கள் அதிர்ச்சி தோல்வியை கொடுத்தன. இந்த நிலையில் தற்போது ஆதிபுருஷ் படத்தில் நடித்து முடித்து விட்டவர், சலார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நடித்துக் கொண்டே தெலுங்கில் பிராஜக்ட் கே மற்றும் மாருதி இயக்கும் படங்களிலும் நடிக்க கமிட்டாகி இருந்தார் பிரபாஸ். ஆனால் தான் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து விட்டதால், சலார் படத்தை மெகா ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் தனது கவனத்தை முழுமையாக திருப்பி இருக்கிறார் பிரபாஸ்.
தற்போது கேஜிஎப்- 2 படம் சூப்பர் ஹிட் அடித்திருப்பதால் சலார் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனால் சலார் படத்தில் நடித்து முடிக்கும்வரை வேறு படங்களில் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ள பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கும் பிராஜெக்ட் கே மற்றும் மாருதி இயக்கும் படத்தை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறார் என்ற தகவல் டோலிவுட்டில் வெளியாகியிருக்கிறது.