பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் பல திறமைகளை கொண்டவரான ஹிப்ஹாப் தமிழா ஆதி, ‛ஆம்பள' என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அதன்பிறகு இயக்குனர், ஹீரோ என்றும் பயணித்து வருகிறார். இவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளார்கள். இதையடுத்து ஆதி காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து சிசிடிவி கேமரா மூலம் அந்த மர்ம நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆக்டிங் டிரைவர்கள் என்றும், குடி போதையில் இருந்த போது இந்த கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.