இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப், கேஜிஎப் -2 என்ற இரண்டு மெகா படங்களையும் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தை தயாரித்து வருகிறது. அடுத்து இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கெங்கரா அடுத்து இயக்கும் படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கடந்த 21ஆம் தேதி ஒரு தகவல் வெளியிட்டனர்.
இந்த நிலையில் கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் பேரன் யுவராஜ் குமார் அறிமுகமாகும் படத்தை தாங்கள் தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த யுவராஜ் குமார் நடிகர் ராஜ்குமாரின் இரண்டாவது மகனும் நடிகருமான ராகவேந்திராவின் மகன் ஆவார். இந்த படத்தை கன்னட சினிமாவில் ராஜகுமாரா, மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமச்சாரி என பல படங்களை இயக்கியுள்ள சந்தோஷ் ஆனந்த் ராம் இயக்குகிறார். மேலும், இந்த யுவராஜ் குமாருக்கு சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சித்தப்பா ஆவார்.