ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மதுரை, மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். நடிகர் தனுஷ் தனது மகன் என உரிமை கோரி வருகிறார். இவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் தனுஷ் என் மகன் என அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் 2017-ல் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் தனுஷ் போலி பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்தார். இதற்காக தனுஷ் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். விசாரணையின் போது தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழின் உண்மை தன்மையை அறிய, அந்த சான்றிதழ் மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு இன்னும் வரவில்லை. ஆனால் அதற்கு முன்பு என் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததற்காக தனுஷ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி நான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக நடிகர் தனுஷ் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.