இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் வாராகி, 46; திருமணமானவர். பத்திரிகை நிருபரான இவர், 'சிவா மனசுல புஷ்பா' என்ற திரைப்படத்தை தயாரித்து, நடித்துள்ளார். இவர் வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில், கணவரை இழந்த 31 வயது பெண் வசிக்கிறார். இந்த நிலையில், அப்பெண்ணின் வீடு புகுந்து, தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.
மொபைல் போனிலும் அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார். இதற்கு அப்பெண் மறுத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்த வாராகி, அப்பெண்ணை அசிங்கமாக திட்டியதுடன், அவரது மடிக்கணினியை அடித்து உடைத்து மிரட்டல் விடுத்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் வடபழநி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து, வாராகியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.