மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது தனது 66வது படமாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் தற்போது கமலின் விக்ரம் படத்தை முடித்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் 67வது படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப்படத்தின் கதை ரஜினிக்காக ஏற்கனவே லோகேஷ் கனகராஜால் எழுதப்பட்டது என்றும் அந்தக் கதையில் தான் சில மாற்றங்களை விஜய்க்காக செய்துள்ளார் என்றும் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் பட அறிவிப்பு வருவதற்கு முன்பே கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க, லோகேஷ் கனகராஜ் ஒரு படம் இயக்க இருப்பதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது ஞாபகம் இருக்கலாம்.
ஆனால் சில காரணங்களால் அந்த கூட்டணி அமைய வாய்ப்பு இல்லாமல் போனது. இந்தநிலையில் ரஜினிக்காக உருவாக்கப்பட்ட அந்த கதை விஜய்க்கு ரொம்பவே பிடித்துப் போனதால் லோகேஷ் கனகராஜுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.