விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
3 படத்துக்குப்பிறகு தனுஷ் அதிக நம்பிக்கையுடன் நடித்து வரும் படம் மரியான். நீர்ப்பறவை, கடல் படங்களைப்போன்று இந்த படமும் கடற்கரையோர மக்கள் சார்ந்த கதையில் உருவாகி வருகிறது. கதைப்படி மீனவனாக நடிக்கும் தனுஷ். இரவு பகல் பாராமல் எந்நேரம் இயக்குனர் படப்பிடிப்பை வைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறாராம். உப்புக்காற்றை நீண்ட நேரம் சுவாசிக்க கஷ்டமாக உள்ளது என்று யூனிட்வாசிகள் சொன்னபோதும், அந்த மாதிரி வார்த்தை தனுஷ் வாயிலிருந்து மட்டும் வர மறுக்கிறதாம். அந்த அளவுக்கு ஒரு பரம்பரை மீனவனாகவே மாறிப்போயிருக்கிறாராம்.
மேலும், இப்படத்துக்காக தென்ஆப்பிரிக்காவிலுள்ள கடற்கரை பகுதிகளில் படமாக்கப்பட்டபோது, சுடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுட்டெரிக்கும் மணலில் விழுந்து புரண்டெல்லாம் நடித்தாராம் தனுஷ். அதைப்பார்த்து கலங்கிப்போன அப்படத்தின் நாயகியான பூ பார்வதி, எந்தவொரு பிரபல ஹீரோக்களுமே இப்படி நடிக்கத்துணிய மாட்டார்கள். அந்த வகையில் தனுஷ் கிரேட் ஆக்டர் என்பதை நிரூபித்து விட்டார். அவர் போன்ற நடிகர்களுடன் நடிக்க சான்ஸ் கிடைத்தது ரொம்ப பெருமையாக உள்ளது என்று தனுஷ் புராணம் பாடிக்கொண்டு திரிகிறார் பார்வதி.