
ஆச்சார்யாவுக்காக சிரஞ்சீவியும் ராம்சரணும் ஆடும் நாட்டுக்கூத்து
இந்தப்படத்தில் சிரஞ்சீவியும் ராம்சரணும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் மட்டுமே சுமார் 25 நிமிடங்கள் வரை இருக்கும் என்றும் சொல்லப்பட்டு வரும் நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஆடும் பாடல் காட்சி ஒன்றும் படத்தில் இடம் பெறுகிறது.
பலே பலே பஞ்சாரா என்கிற அந்த பாடலில் சிரஞ்சீவியும் ராம்சரணும் இணைந்து ஆடும் ஆட்டம் இன்னொரு நாட்டுக்கூத்து போல படு வேகமான நடனமாக இருக்குமென சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக மகதீரா படத்தில் ராம்சரணுடன் ஒரு பாடலில் கடைசி சில நொடிகள் மட்டும் சிரஞ்சீவி இணைந்து ஆடி இருந்தார். ஆனால் முதன்முறையாக இவர்கள் இருவரும் இந்த பாடலில் முழுவதும் இணைந்து ஆடி உள்ளார்கள் என்பது இந்த படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று..

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!