ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சின்னத்திரையின் வளர்ந்து வரும் நடிகையான ரேஷ்மா முரளிதரன், ஜீ தமிழில் ஒளிபரப்பான ‛பூவே பூச்சூடவா' தொடரின் மூலம் அறிமுகமானார். அதில் அவருடன் நடித்த சக நடிகரான மதன் பாண்டியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ‛பூவே பூச்சூடவா' முடிந்த கையோடு இருவரும் கலர்ஸ் தமிழில் ‛அபி டெய்லர்' என்ற சீரியலில் ஜோடியாக சேர்ந்து நடித்து வருகின்றனர். அபி டெய்லர் தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஜீ தமிழின் ‛பூவே பூச்சூடவா' குழு புதிய சீரியல் ஒன்றை தயாரிக்க உள்ளது. இதில் ரேஷ்மா தான் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் புதிய தொடரிலும் ரேஷ்மா - மதன் ஜோடியாக நடிப்பார்களா? இல்லை புது கணவரை பிரிந்து ரேஷ்மா மட்டும் தனியாக நடிக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரேஷ்மா நடிக்கும் புதிய தொடர் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.