'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

சின்னத்திரை பிரபலங்களான தாடி பாலாஜி, நித்யா ஆகியோரின் குடும்ப பிரச்னை தான் இணையத்தில் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. இருவரும் மாறி மாறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். பிக்பாஸ் மூலம் பிரபலமான நித்யா, பிக்பாஸ் ஷோவினை தொகுத்து வழங்கிய இரண்டு நடிகர்களை ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர், நடிகர் கமல்ஹாசனை 'வொர்ஸ்ட் கேரக்டர்' என விமர்சித்தும், நடிகர் சிம்புவை தங்கமான மனிதர் என புகழாராம் சூட்டியும் பேசியுள்ளார்.
சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் நித்யா பேசிய போது, 'பிக்பாஸ் முடிந்ததும் கமல்ஹாசன் மது விருந்து வைத்தார். அதில் பாலாஜி என்னிடம் சொல்லாமலேயே வந்தார். அங்கே அவர் கமல்ஹாசன் முன் நல்லவர் போல் நடித்தார். அப்போதே இதைப்பற்றி கமல்ஹாசனிடம் பேச முற்பட்டேன். மக்கள் நீதி மய்யத்திற்காக மிகவும் உழைத்தேன். ஆனால், அவர் என்னிடம் பிரச்னை குறித்து எதையும் கேட்க தயாராக இல்லை. தன் கட்சியில் இருக்கும் பெண்ணின் பிரச்னையே அவரால் தீர்த்து வைக்க முடியவில்லை. அவரா மக்கள் பிரச்னையை தீர்ப்பார்.
மக்கள் நீதி மய்யத்தில் எந்த நீதியும் இல்லை. மீடியாவில் இருந்து என்னிடம் பேசிய ஒரே நபர் சிம்பு மட்டும் தான். முதலில் அவர் கால் செய்தபோது யாரோ மிமிக்ரி செய்து விளையாடுகிறார்கள் என்று நினைத்து கட் செய்தேன். ஆனால், அவர் வீடியோ காலில் வந்து பேசினார். சிம்பு மிகவும் தங்கமான மனிதர்' என்று அதில் கூறியுள்ளார்.




