ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. தற்போது பொன்னியின் செல்வன், விருமன் படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்து சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் ஏப்ரல் 2ல் வெளியான சில படங்கள் சினிமாவில் அவருக்கு முக்கிய இடத்தை தந்துள்ளது. குறிப்பாக அவரின் சூப்பர் ஹிட் படங்களான பையா, கொம்பன் மற்றும் சுல்தான் ஆகிய மூன்று படங்களும் இந்த தினத்தில் வெளியானவை.
இதுப்பற்றி கார்த்தி கூறுகையில், ‛‛பையா படம் எனக்கு புது பிம்பத்தை வெளிப்படுத்த வித்திட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் என்னை கிராமத்து மண்ணுக்கு கொம்பன் அழைத்துச் சென்றது. சுல்தான் மீண்டும் என்னை வாண்டுகளை வசப்படுத்த வைத்தது. இவை எல்லாமே ஒரே வெளியீட்டு தேதியில் தான். இந்தப் படைப்புகளை நினைவுகளில் நிலைநிறுத்திய இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி'' என்கிறார்.