பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் அடுத்து ரஜினி நடிக்கும் 169 ஆவது படத்தை இயக்கப் போகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது குறித்த தகவல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
நெல்சன் அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் ரஜினி படம் இயக்குவதற்கு விஜய் தான் காரணம். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது தனது அடுத்த படத்திற்கான கதையை ரஜினி கேட்டு வருவதாக கூறிய விஜய், நீங்கள் ஏன் முயற்சி செய்யக் கூடாது என்று கூறினார். ஆனால் ரஜினி மிகப்பெரிய லெஜண்ட் என்பதால் அவருக்கு எப்படி கதை தயார் செய்வது என்று தயக்கமாக இருந்தது. ஆனால் விஜய் என்னுடைய தயக்கத்தை உடைத்தெறிந்து ரஜினி இடத்தில் கதை சொல்ல வைத்தார். அவர் கொடுத்த தைரியம் நம்பிக்கை காரணமாக தான் இப்போது நான் ரஜினியின் 169வது படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் நெல்சன்.