பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் புஷ்பா. இந்த படத்தின் முதல் பாகத்தில் ஓ சொல்றியா மாமா என்ற கவர்ச்சி குத்தாட்ட பாடலில் சமந்தா நடனம் ஆடி இருந்தார். அந்த பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படம் ரூ. 350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்தது.
இதன் காரணமாக புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திலும் ஐட்டம் பாடல் ஒன்று இடம் இருக்கிறது. அதில் மீண்டும் சமந்தாவை நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதன் காரணமாக தற்போது அந்த வாய்ப்பு பாலிவுட் நடிகை திஷா பதானிக்கு சென்றுள்ளது. அவர் ஓகே சொல்லிவிட்டார்.
திஷா பதானி தான் புஷ்பா படத்தில் சமந்தா நடனம் ஆடிய பாடலுக்கு முதலில் நடனமாட இருந்தவர். அவரது கால்ஷீட் பிரச்சனை காரணமாக பின்னர் இந்த பாடலில் நடனமாட சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.