மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் புஷ்பா. இந்த படத்தின் முதல் பாகத்தில் ஓ சொல்றியா மாமா என்ற கவர்ச்சி குத்தாட்ட பாடலில் சமந்தா நடனம் ஆடி இருந்தார். அந்த பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படம் ரூ. 350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்தது.
இதன் காரணமாக புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திலும் ஐட்டம் பாடல் ஒன்று இடம் இருக்கிறது. அதில் மீண்டும் சமந்தாவை நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதன் காரணமாக தற்போது அந்த வாய்ப்பு பாலிவுட் நடிகை திஷா பதானிக்கு சென்றுள்ளது. அவர் ஓகே சொல்லிவிட்டார்.
திஷா பதானி தான் புஷ்பா படத்தில் சமந்தா நடனம் ஆடிய பாடலுக்கு முதலில் நடனமாட இருந்தவர். அவரது கால்ஷீட் பிரச்சனை காரணமாக பின்னர் இந்த பாடலில் நடனமாட சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.