Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதியால் வேலை வாய்ப்பு பெற்ற ஒரு லட்சம் பேர்

24 மார், 2022 - 10:32 IST
எழுத்தின் அளவு:
1-lakhs-people-got-job-with-help-of-Vijaysethupathi

நடிகர் விஜய்சேதுபதியால் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ள தகவல் திடீரென வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது: புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு 'வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பு பெற்றிருப்பதாகவும், இந்த அமைப்பை பின்னணியில் இருந்து இயக்குவது விஜய்சேதுபதி என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் இ.பா.வீரராஹவன் கூறியிருப்பதாவது: புதுச்சேரியை சேர்ந்த நான் ஆசிரியராக பணியாற்றி வந்தேன். சமூக சேவையில் அக்கறை கொண்ட நான் 2016ம் ஆண்டு துவங்கி 3 வாட்சப் குழுக்கள் மூலம் எனது சக்திக்கேற்ற வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து வந்தேன்.

இத்தகவலை அறிந்த விஜய்சேதுபதி அவர் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் என்னை பங்கேற்க செய்தார். அதன் பிறகு எனது பணிகளை தொடர்ந்து செய்ய உதவி செய்வதாக வாக்களித்தார். இதனால் எனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து முழுநேர பணியாக இதனை செய்ய ஆரம்பித்தேன்.

இதற்கு ஆதரவு பெருகவே இதனை ஒரு அரசு அனுமதி பெற்ற தொண்டு நிறுவனமாக மாற்றச் சொன்னார். அதன்படி 2019ம் ஆண்டு வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் என்ற இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அலுவலகம் புதுச்சேரி தவளகுப்பத்தில் உள்ளது. இங்கு பணியாற்றும் முழுநேர பணியாளர்களுக்கு விஜய்சேதுபதி மாதந்தோறும் சம்பளம் வழங்கி வருகிறார்.

இந்த அமைப்பின் மூலம் இந்த மார்ச் மாதம் வரை ஒரு லட்சத்து 133 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தை 4 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் 1400 க்கும் மேற்பட்ட வாட்சப் குழுக்கள் மூலம் இணைந்துள்ளனர். இதுவரை 73 சுயதொழில் முனைவர்களை உருவாக்கி உள்ளோம், 17 வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி உள்ளோம்.

இந்தத் தகவலை வெளியில் சொல்ல முயற்சித்தபோதெல்லாம் கண்டிப்பான முறையில் விஜய்சேதுபதி என்னைத் தடுத்து வந்தார். அவர் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. அவரது இந்த பெரிய பணி உலகத்துக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இப்போது சொல்கிறேன். என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தடை நீங்கியது: நாளை ஓடிடியில் வெளியாகிறது வலிமைதடை நீங்கியது: நாளை ஓடிடியில் ... என் கதையை படமாக்க மாதவன் தான் தகுதியானவர்: நம்பி நாராயணன் என் கதையை படமாக்க மாதவன் தான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in