இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கடந்த 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ஜோசப். இந்தப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஆத்மியா உள்பட பலர் நடிக்க பத்மகுமார் இயக்கியிருந்தார். தன்னை விட்டு பிரிந்து சென்ற தனது முன்னாள் மனைவி விபத்தில் இறந்து விடுகிறார். அதையடுத்து அது விபத்து அல்ல, கொலை என்பதை கண்டுபிடிக்கும் ஒரு காவல்துறை அதிகாரியாக ஜோஜு ஜார்ஜ் ஜேம்ஸ் படத்தில் நடித்திருந்தார். அப்படிப்பட்ட ஒரு கிரைம் திரில்லர் படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் தற்போது ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். அந்த படத்தை மலையாளத்தை இயக்கிய பத்மகுமாரே இப்போது விசித்திரன் படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசரை சமீபத்தில் நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இப்படம் மே மாதம் 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.