ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
கடந்த 2018-ல் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ஜோசப் என்கிற படம் தற்போது தமிழில் 'விசித்திரன்' என்கிற பெயரில் ரீமேக்காகி வருகிறது. மலையாளத்தில் கதையின் நாயகனாக குணச்சித்திர நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்திருந்த கதாபாத்திரத்தில், தமிழில் ஆர்கே சுரேஷ் நடித்து வருகிறார். ஆர்கே சுரேஷின் மனைவியாக பூர்ணா நடித்துள்ளார். மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய பத்மகுமார் தான் தமிழிலும் இயக்கி வருகிறார்.
இயக்குனர் பாலாவின் 'பி ஸ்டுடியோஸ்' தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, இயக்குனர் ஜான் மகேந்திரன் வசனம் எழுதியுள்ளார். கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பே இந்தப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது படத்தின் மொத்த பணிகளும் நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில் இந்தப்படத்தை பார்த்த இயக்குனர் பாலா, ஆர்கே.சுரேஷின் நடிப்பை பாராட்டியுள்ளார். இந்தப்படத்தை தயாரித்ததற்காக பாலாவுக்கு நன்றி தெரிவித்து இந்த தகவலை வெளியிட்டுள்ள ஆர்கே.சுரேஷ், பாலாவுடன் தான் எடுத்துக்கொண்ட செல்பியையும் பதிவிட்டுள்ளார்.