ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
நடிகை அமலா பாலை விஜய், விக்ரம் ஜோடியாக நடிக்க வைத்து உயரத்துக்கு கொண்டு சென்றவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். அதுவே காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சுதந்திரமாக வாழ்ந்து பழகிய அமலாபாலால் கட்டுக்கோப்பான குடும்பத்திற்குள் வாழ முடியவில்லை. இதன் காரணமாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அமலாபால் பிசியாக நடிக்கத் தொடங்கி விட்டார்.
தற்போது அமலாபால் ஒரு வெப்சீரிஸில் கணவன் ஜெகபதி பாபுவால் துன்புறுத்தப்படும மனைவியாக நடித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸின் புரமோசனுக்காக அவர் அளித்த பேட்டில் தனது மணவாழ்க்கை, விவாகரத்து குறித்து பேசி இருக்கிறார்.
அது வருமாறு: நான் விவகாரத்து பெற்று பிரிய முடிவு செய்தபோது என்னை யாரும் ஆதரிக்கவில்லை. அனைவரும் என்னை பயமுத்தவே முயற்சித்தனர். வெற்றிகரமான நடிகையாக இருந்த போதிலும் அந்த சமயத்தில் பயத்துடனேயே வாழ்ந்தேன். எனது சந்தோஷம் மற்றும் மனநிலை பற்றி யாரும் கவலைப்படவில்லை என கூறியிருக்கிறார்.