எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்கில் மூன்று வருடங்களுக்கு முன் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை வசீகரித்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியானது. அதனாலேயே அதைத் தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஜோடி இணைந்து நடித்தனர். ஆனால் முதல் படத்தில் கிடைத்த வெற்றி இரண்டாவது படத்தில் கிடைக்கவில்லை. தவிர கிசுகிசுக்களில் வேறு இருவரும் வசமாக சிக்கிக்கொண்டனர்.
இதனால் இந்த இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க மாட்டார்கள் என சொல்லப்பட்டு வந்த நிலையில் மூன்றவதாகவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனராம், இந்தப்படத்தை பிரபல முன்னை இயக்குனர் சுகுமார் இயக்கவுள்ளார். தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தை இயக்கி வரும் சுகுமார் அந்தப்படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக இந்தப்படத்தை துவங்க இருக்கிறாராம்.