தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பில்லா பாண்டி, வேட்டை நாய் படங்களை தொடர்ந்து ஆர்கே சுரேஷ் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் விசித்திரன். கடந்த 2018-ல் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ஜோசப் என்கிற படம் தான், தற்போது தமிழில் 'விசித்திரன்' ஆக ரீமேக்காகி உள்ளது.. மலையாளத்தில் கதையின் நாயகனாக குணச்சித்திர நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்திருந்த கதாபாத்திரத்தில், தமிழில் ஆர்கே சுரேஷ் நடித்து வருகிறார்.
ஆர்கே சுரேஷின் மனைவியாக பூர்ணா நடித்துள்ளார். மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய பத்மகுமார் தான் தமிழிலும் இயக்கியுள்ளார். இயக்குனர் ஜான் மகேந்திரன் வசனம் எழுதியுள்ள இந்தப்படம் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. படத்தை பார்த்த இயக்குனர் பாலாவும் ஆர்கே.சுரேஷின் நடிப்பை பாராட்டியுள்ளார்.
இதுபற்றி ஆர்கே சுரேஷ் கூறும்போது, “முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்தன.. ஆனால் என் நலனில் எப்போதும் அக்கறை காட்டும் இயக்குனர் பாலா தான் என்னை கதாநாயகனாக நடிக்கும்படி கூறினார். அதுமட்டுமல்ல ஒரிஜினலை இயக்கிய இயக்குனர் பத்மகுமாரே இந்தப்படத்தை இயக்கட்டும் என சுதந்திரமும் கொடுத்தார். தற்போது ஓடிடி தளங்களில் இந்த படத்தை வெளியிட நிறைய பேர் கேட்கிறார்கள்.. தயாரிப்பாளர் பாலாதான் பட ரிலீஸ் குறித்து தீர்மானிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.