என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கொரோனா தடுப்புக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாகி உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தடுப்பு நடவடிக்கைக்கு கொரோனா நிதி வழங்கும்படி முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதையடுத்து திரையுலகினர், தொழிலதிபர்கள், பொதுமக்கள் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.
திரையுலகில் நடிகர் சூர்யா குடும்பத்தினர் ரூ.1 கோடி நிதி அளித்தனர். தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் (ரூ.25 லட்சம்) நடிகராக உதயநிதி (ரூ.25 லட்சம்), அஜித் (ரூ.25 லட்சம்), சவுந்தர்யா ரஜினியின் மாமனார் குடும்பத்தினர் சார்பாக (ரூ.1 கோடி) நிதி வழங்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று இயக்குனர் வெற்றிமாறன்(ரூ.10 லட்சம்), நடிகர் சிவகார்த்திகேயன் (ரூ.25 லட்சம்), நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தினர் சார்பாக ரூ.10 லட்சம்) என முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேற்று வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி குடும்பத்தினர் இதற்கான காசோலையை வழங்கினர்.