பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
நடிகா் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். மரகதநாணயம் படத்தில் நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் உருவாகி உள்ளது. இதுகுறித்து வெளிவந்த தகவல்கள் எதையும் அவர்கள் மறுக்கவில்லை. சமீபத்தில் ஆதி தந்தையின் பிறந்த நாள் விழாவில் நிக்கி கல்ராணி கலந்து கொண்டார். பல நேரங்களில் ஆதியும், நிக்கி கல்ராணியும் இணைந்து விமானத்தில் பயணம் செய்தார்கள். ஐதராபாத்தில் பல இடங்களில் ஒன்றாக சுற்றி உள்ளனர். தங்களது காதலை இருவருமே இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ஆதி கூறியிருப்பதாவது : கிளாப் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து, லிங்குசாமி இயக்கும் 'தி வாரியர்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன். சவாலான கதைகளை நிதானமாகத் தேர்ந்தெடுக்கிறேன். அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'பார்ட்னர்' ஒரு நகைச்சுவை படம். எனது திருமணம் பற்றி விரைவில் அறிவிப்பு வரும். காதல் திருமணம்தான் ஆனாலும் இரண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் நடக்கும். விரைவில் முறைப்படி அறிவிப்பேன். என்றார்.