காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் |
நடிகா் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். மரகதநாணயம் படத்தில் நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் உருவாகி உள்ளது. இதுகுறித்து வெளிவந்த தகவல்கள் எதையும் அவர்கள் மறுக்கவில்லை. சமீபத்தில் ஆதி தந்தையின் பிறந்த நாள் விழாவில் நிக்கி கல்ராணி கலந்து கொண்டார். பல நேரங்களில் ஆதியும், நிக்கி கல்ராணியும் இணைந்து விமானத்தில் பயணம் செய்தார்கள். ஐதராபாத்தில் பல இடங்களில் ஒன்றாக சுற்றி உள்ளனர். தங்களது காதலை இருவருமே இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ஆதி கூறியிருப்பதாவது : கிளாப் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து, லிங்குசாமி இயக்கும் 'தி வாரியர்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன். சவாலான கதைகளை நிதானமாகத் தேர்ந்தெடுக்கிறேன். அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'பார்ட்னர்' ஒரு நகைச்சுவை படம். எனது திருமணம் பற்றி விரைவில் அறிவிப்பு வரும். காதல் திருமணம்தான் ஆனாலும் இரண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் நடக்கும். விரைவில் முறைப்படி அறிவிப்பேன். என்றார்.