திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
விஷ்ணு விஷால் உடன் இணைந்து மஞ்சிமா மோகன் நடித்த படம் எப் ஐ ஆர். கடந்த மாதம் வெளியான இந்தப் படத்தை மனு ஆனந்த் இயக்கியிருந்தார். இதையடுத்து தனது அடுத்த படத்தை இயக்கும் பணிகளை தொடங்கிவிட்ட அவர், தனது புதிய படத்தில் உதவி இயக்குனராக பணி புரிய விருப்பம் உள்ளவர் தன்னை அணுகலாம் என ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை மஞ்சிமா மோகன் அது குறித்து ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், மனு ஆனந்திடம் உதவி இயக்குனராக சேர விரும்புவர்கள் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியதோடு, நான் ஏற்கனவே அவரிடத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய விண்ணப்பித்தேன். ஆனால் என்னை அவர் வேண்டாம் என்று கூறிவிட்டார் என்று இந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.
அதையடுத்து மனு ஆனந்த் வெளியிட்ட பதிவில், உங்களது விண்ணப்பத்தை நான் பெறவில்லை. ஒருவேளை ஈமெயிலில் அது தவறி இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். அதனால் மனு ஆனந்தின் புதிய படத்தில் மஞ்சிமா மோகன் உதவி இயக்குனராக வேலை செய்வார் என்று தெரிகிறது.