22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் தொடர்களில் ஒன்று வள்ளி திருமணம். இதில் நக்ஷத்திரா, ஷ்யாம், நளினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் பார்வையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த தொடர், தற்போது சற்று சொதப்பி வருகிறது. எனவே, வழக்கம் போல் ஹிட் சீரியல் நடிகை ஒருவரை சிறப்பு வரவாக அழைத்து வந்து சுவாரசியத்தை கூட்ட முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் வள்ளி திருமணம் தொடரில் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்வேதா பண்டேகர் நுழைகிறார்.
நாயகன் கார்த்தியின் தோழியாக அறிமுகமாகியுள்ள ஸ்வேதா பண்டேகர், 'பூமிகா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வள்ளிக்கு வில்லியாக அவர் இனி இந்த சீரியலில் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஸ்வேதா பண்டேகர் 'சந்திரலேகா' தொடரின் நாயகியாக நடித்து புகழின் உச்சத்தில் உள்ளார். 2014ம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் 7 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருவதோடு இதுவரை 2100 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த சீரியலின் ஆரம்பம் முதல் தற்போது வரை ஸ்வேதா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.