சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
கலர்ஸ் தமிழ் சேனலின் புதிய தொடர் வள்ளி திருமணம். இதில் நட்சத்திரா, நளினி, நாஞ்சில் விஜயன், ஷியாம் உள்பட பலர் நடிக்கிறார்கள். சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் வள்ளி திருமணம் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தேனியை மையமாக கொண்ட கதை களம். கிராமத்து தெனாவெட்டு பெண் வள்ளி. கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அடாவடி வசூல் செய்வதுதான் அவரது தொழில். ஆனாலும் அன்புக்கு கட்டுப்பட்டவள். இவ்வளவு அடாவடியாக பெண்ணுக்கு எப்படி திருமணம் செய்து வைக்கப்போகிறோம் என்று கவலைப்படுகிறார் தாய். இந்த நேரத்தில் வெளிநாட்டில் தொழில் செய்து வரும் கார்த்திக் தொழில் விஷயமாக தேனிக்கு வருகிறார். வந்த இடத்தில் வள்ளியை சந்தித்து காதல் கொள்கிறார்.
காதலித்த பிறகுதான் அவர் அடாவடியான பெண் என்று தெரிகிறது. இதனால் அவர் தன் குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று கருதி அவரிடமிருந்து ஒதுங்குகிறார். தனது அடாவடித்தனமான குணம்தான் தன் காதலுக்கு தடையாக இருக்கிறது என்று கருதும் வள்ளி, தன் குணத்தை மாற்றிக் கொண்டு காதலுக்காக அடக்க ஒடுக்கமான பெண்ணாக மாறுகிறார். அவர்கள் காதல் கைகூடியதா? வள்ளி ஏன் அடாவடி பெண்ணாக இருக்கிறார் என்பதை சொல்வதுதான் தொடரின் கதை.