இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இசையமைப்பாளராக உருவாக வேண்டுமென நினைத்து கதாநாயகியாக மாறியவர் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகை என்பதால் நடனம் மட்டும் கற்றுக் கொள்ளாமல் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்காக சண்டைக்கலையையும் கற்றுக்கொண்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். கடந்த வருடம் தெலுங்கில் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்த கிராக் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து சண்டைக்காட்சிகளில் ஆச்சரியப்படுத்தினார் ஸ்ருதிஹாசன்.
தற்போது கேஜிஎப் புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸுடன் சலார் படத்தில் இணைந்து நடித்து வரும் ஸ்ருதிஹாசனுக்கு இந்தப் படத்திலும் ஆக்சன் காட்சிகள் இருக்கின்றனவாம். இதற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்றுள்ள ஸ்ருதிகாசன் இதுகுறித்து கூறும்போது, "பெண்களுக்கு சினிமாவில் ஆக்ஷன் காட்சிகள் ரொம்பவே குறைவு தான்.. இதற்காக இயக்குனர்களை நான் குறை சொல்ல மாட்டேன். நிஜ நிலவரம் அப்படி இருக்கிறது. அதேசமயம் மற்ற யாரையும் விட உதைப்பதில் வல்லவர்கள் பெண்கள் தான். பெண் உதைப்பதை பார்க்கவே அழகாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.