ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

இசையமைப்பாளராக உருவாக வேண்டுமென நினைத்து கதாநாயகியாக மாறியவர் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகை என்பதால் நடனம் மட்டும் கற்றுக் கொள்ளாமல் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்காக சண்டைக்கலையையும் கற்றுக்கொண்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். கடந்த வருடம் தெலுங்கில் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்த கிராக் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து சண்டைக்காட்சிகளில் ஆச்சரியப்படுத்தினார் ஸ்ருதிஹாசன்.
தற்போது கேஜிஎப் புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸுடன் சலார் படத்தில் இணைந்து நடித்து வரும் ஸ்ருதிஹாசனுக்கு இந்தப் படத்திலும் ஆக்சன் காட்சிகள் இருக்கின்றனவாம். இதற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்றுள்ள ஸ்ருதிகாசன் இதுகுறித்து கூறும்போது, "பெண்களுக்கு சினிமாவில் ஆக்ஷன் காட்சிகள் ரொம்பவே குறைவு தான்.. இதற்காக இயக்குனர்களை நான் குறை சொல்ல மாட்டேன். நிஜ நிலவரம் அப்படி இருக்கிறது. அதேசமயம் மற்ற யாரையும் விட உதைப்பதில் வல்லவர்கள் பெண்கள் தான். பெண் உதைப்பதை பார்க்கவே அழகாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.