ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசையமைப்பாளராக உருவாக வேண்டுமென நினைத்து கதாநாயகியாக மாறியவர் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகை என்பதால் நடனம் மட்டும் கற்றுக் கொள்ளாமல் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்காக சண்டைக்கலையையும் கற்றுக்கொண்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். கடந்த வருடம் தெலுங்கில் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்த கிராக் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து சண்டைக்காட்சிகளில் ஆச்சரியப்படுத்தினார் ஸ்ருதிஹாசன்.
தற்போது கேஜிஎப் புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸுடன் சலார் படத்தில் இணைந்து நடித்து வரும் ஸ்ருதிஹாசனுக்கு இந்தப் படத்திலும் ஆக்சன் காட்சிகள் இருக்கின்றனவாம். இதற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்றுள்ள ஸ்ருதிகாசன் இதுகுறித்து கூறும்போது, "பெண்களுக்கு சினிமாவில் ஆக்ஷன் காட்சிகள் ரொம்பவே குறைவு தான்.. இதற்காக இயக்குனர்களை நான் குறை சொல்ல மாட்டேன். நிஜ நிலவரம் அப்படி இருக்கிறது. அதேசமயம் மற்ற யாரையும் விட உதைப்பதில் வல்லவர்கள் பெண்கள் தான். பெண் உதைப்பதை பார்க்கவே அழகாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.