இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழில் 'ஏழாம் அறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகானார். விஜய், அஜித், சூர்யா என டாப் நடிகர்களுடன் நடித்திருந்தாலும் தமிழில் அவர் டாப் நடிகையாக இடம் பெற முடியவில்லை. தமிழில் நடிப்பதைவிடவும் ஹிந்தியில் நடிப்பதில் அவர் அதிக ஆர்வம் காட்டியதே அதற்குக் காரணம்.
இருந்தாலும் தற்போது பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் பான்--இந்தியா படமான 'சலார்' படத்தில் அவரது ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னணி இயக்குனரான கோபிசந்த் மலினேனி இப்படத்தை இயக்குகிறார்.
இதற்கடுத்து சிரஞ்சீவி ஜோடியாக மற்றுமொரு தெலுங்குப் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். பாபி இயக்கத்தில் சிரஞ்சீவியின் 154வது படமாக இந்தப் படம் உருவாக உள்ளது. நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு இது பற்றி தகவலை சிரஞ்சீவியும் வெளியிட்டிருந்தார்.
அடுத்தடுத்து மூன்று பெரிய தெலுங்குப் படங்களில் நடிக்க ஸ்ருதி ஒப்பந்தமாகி இருந்தாலும் 'சலார்' படம் தவிர மற்ற இரண்டு படங்களிலும் 60 வயதிற்கு அதிகமான நடிகர்களான பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோருடன் நடிக்க சம்மதித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.