நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் பரவலாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து தமிழில் நடிப்பதற்கும் திட்டமிட்டு உள்ளார்.
இந்த நிலையில் பூஜாஹெக்டே அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமாவில் நம்பர் 1, நம்பர் 2 என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது படங்களில் வெற்றியை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். அதன் காரணமாக நான் ஒருபோதும் நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்று திட்டமிடுவது இல்லை. நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களுக்கு பிடித்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்கள் ரசிக்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே கவனமாக இருக்கிறேன். அதோடு சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக உள்ளது.
தெலுங்கில் நான் நடனமாடிய புட்டபொம்மா பாடலின் நடனத்தை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் ரசித்தார்கள். அதன் காரணமாக ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களை கவரக்கூடிய நடன அசைவுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன். பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து ஆடியுள்ள நடனத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.