காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

கார்த்திக் நரேன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், தனுஷ், மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மாறன்'. இப்படம் அடுத்த வாரம் மார்ச் 11ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்புதான் இப்படத்தின் டிரைலர் யு டியுபில் வெளியிடப்பட்டது. அதற்கடுத்து தொடர்ந்து பல்வேறு விதமான பிரமோஷன்களை தயாரிப்பு நிறுவனமும், ஓடிடி நிறுவனமும் சமூக வலைத்தளங்களில் நடத்தி வருகின்றன.
ஆனால், படத்தின் நாயகனான தனுஷ் அவற்றிலிருந்து விலகியே இருக்கிறார். டுவிட்டர் தளத்தில் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி அவருடைய மனைவி ஐஸ்வர்யாவுடனான பிரிவு குறித்த அறிக்கைதான் அவரது கடைசி பதிவாக உள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் பதிவிட்டதுதான் அதில் கடைசி பதிவு.
'மாறன்' படம் ஓடிடியில் வெளியாவதால் விலகி இருக்கிறாரா, அல்லது தனிப்பட்ட காரணங்களால் விலகி இருக்கிறாரா என்பது குறித்து திரையுலகினரும், தனுஷ் ரசிகர்களும் குழம்பி இருக்கிறார்கள். தனுஷ் நடித்த கடைசியாக வெளிவந்த தமிழ்ப் படமான 'ஜகமே தந்திரம்', ஹிந்திப் படமான 'அத்ராங்கி ரே', இரண்டுமே ஓடிடி வெளியீடுகள்தான் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. என்ன இருந்தாலும் 'மாறன்' படத்தின் நாயகனான அவர் பட வெளியீடு குறித்து எந்த ஒரு பதிவும் போடாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.




