புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த 40 வருடமாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. அவரது மகன் துல்கர் சல்மான் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி அவரும் பத்து வருடங்களை கடந்து விட்டார். இந்த பத்து வருடங்களுக்குள் தந்தை-மகன் இருவரது படங்களும் ஒரே தேதியில் ரிலீசாகும் சூழல் வந்தபோது ஏதோ ஒரு தயாரிப்பாளர் விட்டுக்கொடுத்து கொஞ்சம் இடைவெளிவிட்டு இரண்டு படங்களையும் ரிலீஸ் செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் முதன்முறையாக மம்முட்டி, துல்கர் சல்மான் இருவரது படங்களும் இன்று (மார்ச் 3) ஒரே நாளில் வெளியாக உள்ளது. தமிழில் நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் ஹே சினாமிகா என்கிற படத்தில் துல்கர் கதாநாயகனாக நடித்துள்ளார். காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
அதேபோல மலையாளத்தில் மம்முட்டி நடித்த பீஷ்ம பருவம் படமும் வெளியாகி உள்ளது. இரண்டுமே மலையாளத்தில் உருவாகி இருந்தால் நிச்சயம் அங்குள்ள தயாரிப்பாளர்கள் கூடிப்பேசி இரண்டு படங்களுக்கும் இடைஞ்சல் வராமல் ரிலீஸ் தேதியை மாற்றி இருப்பார்கள். ஆனால் இங்கே துல்கர் படம் தமிழிலும், மம்முட்டி படம் மலையாளத்திலும் வெளியாவதால் இரண்டு படங்களுக்கும் வசூல் ரீதியாக எந்த பிரச்சினையும் இருக்காது என்றே தெரிகிறது.