''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
மணிகண்டன் இயக்கத்தில் பிப்ரவரி 11ந்தேதி வெளியான படம் கடைசி விவசாயி. விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை பார்த்து வியந்து போன இயக்குனர் மிஷ்கின், மணிகண்டனை உசிலம்பட்டியில் உள்ள அவர் வீட்டிற்கு சென்று சந்தித்து மாலை அணிவித்து கட்டித்தழுவி பாராட்டி இருக்கிறார். அதையடுத்து இப்படத்தில் நாயகனாக நடித்து இருந்த நல்லாண்டியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி உள்ளார்.
இது குறித்த புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு மிஷ்கின் கூறுகையில், ‛‛கடைசி விவசாயி தந்த மகா கலைஞனாக மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்கு சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பை தமிழுக்கு தந்த அவனுக்கு நன்றி கூறி அவன் கரங்களை முத்தமிட்டேன். அப்படத்தின் கதையின் நாயகனான ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்கு சென்று அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினேன். மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்கு சென்று மதிய உணவு உண்டோம். இந்த ஒரு நாள் ஒரு அற்புத நாளாக மாறியது. மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்'' என தெரிவித்துள்ளார்.