பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஒருபக்கம் தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தான் விரும்பிய இடங்களுக்கு நெருங்கிய நண்பர்களுடன் சுற்றுலா என தனது நேரத்தை சரியாக பிரித்து வைத்திருக்கிறார் நடிகை சமந்தா. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனது திருமண முறிவு குறித்த அறிவித்த சமந்தா, அதிலிருந்து ரிலாக்ஸ் செய்ய அடிக்கடி டூர் கிளம்பி விடுகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் கேரளா, கோவா ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வந்த சமந்தா, கடந்த ஜனவரியில் சுவிட்சர்லாந்து ட்ரிப் சென்றுவந்தார். அதன்பிறகு சாகுந்தலம், யசோதா, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் மீதமிருந்த தனது பணிகளை முடித்து கொடுக்க ஆரம்பித்தார். இப்போது மீண்டும் அவர் தனது தோழி மேக்னா வினோத்துடன் மீண்டும் கேரளாவுக்கு சுற்றுலா கிளம்பிவிட்டார்.
இரண்டு தினங்களுக்கு முன் சாலக்குடியில் உள்ள அதிரம்பள்ளி அருவியின் அருகே ஒரு பாறையின் மீது நின்றுகொண்டே யோகா செய்வது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் சமந்தா. இப்போது ஆழப்புழா அருகில் உள்ள மராரிகுளம் கடற்கரையில் தனது தோழியுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா, எல்லாமே மில்லியனில் லைக்ஸ அள்ளி வருகின்றன.